• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சார்ஜாவில் இருந்து கோவை வந்த சிறப்பு விமானம் – 171 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

July 13, 2020 தண்டோரா குழு

சார்ஜாவிலிருந்து கோவைக்கு சிறப்பு விமானத்தில் வந்த 171 பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா ஊரடங்கால் பிற நாடுகளுக்கு பணிக்கு சென்ற சிக்கியுள்ள இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா திரும்பி வருகின்றனர். சென்னையில் கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளதால் சென்னை வரும் சில விமானங்கள் கோவை விமானத்திற்கு தரையிரக்கப்பட்டு, பயணிகள் கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் சார்ஜாவில் இருந்து 171 இந்தியர்களுடன் புறப்பட்ட சிறப்பு விமானம் நேற்று இரவு 9.30 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தது. இதையடுத்து விமான நிலையத்திலிருந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் 5 குழந்தைகள் உட்பட அனைவருக்கும் கரோனா பரிசோதனைக்கு சளி மாதிரிகளை சேகரித்தனர்.இதையடுத்து அனைத்து பயணிகளும் அருகே உள்ள விடுதிகளில் ஒரு நாள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். நாளை பரிசோதனை முடிவுகள் வெளியான பின் பயணிகள் சொந்த ஊருக்கு சென்று 14 நாள் தனிமைபடுத்திக்கொள்வர்.

மேலும் படிக்க