• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துடியலூர் காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று

July 12, 2020 தண்டோரா குழு

கோவை துடியலூர் காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு துடியலூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த 31 காவலர்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு பெண் காவலர் உள்ளிட்ட 5 பேருக்கு இன்று காலை கொரானா தொற்று உறுதியானது.இதைத்தொடர்ந்து தொற்று ஏற்பட்ட 5 காவலர்களும் தற்போது கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.காவல் நிலையத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

துடியலூர் காவல் நிலையம் மூடப்பட்டு தற்காலிகமாக காவல் நிலையம்
அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு மாற்றப்படுகின்றது.இதையடுத்து மீண்டும் காவல்நிலையத்தில் உள்ள அனைவருக்கும் கொரானா பரிசோதனை மேற்கொள்ளபட உள்ளது.இன்னும் 10 காவலர்களின் முடிவுகள் வரவேண்டியுள்ளதால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் தொற்று உறுதியான காவலர்களுடன் தொடர்புடைய நபர்களை கண்டறியும் பணி நடைபெறுகிறது.ஒரே காவல்நிலையத்தில் பணிபுரியும் 5 காவலர்களுக்கு கொரானா தொற்று உறுதியானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க