• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைக்கு புதிய காவல் துணை ஆணையர்கள் மற்றும் எஸ்.பி நியமனம் !

July 11, 2020 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் துறையில் சட்டம் ஒழுங்கு மற்றும் தலைமை துணை ஆணையர்கள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து கோவைக்கு புதிதாக இரண்டு துணை ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 51 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.அதன்படி கோவை மாநகர காவல் துறையில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த பாலாஜி சரவணன் மற்றும் கோவை மாநகர தலைமையக காவல் துணை ஆணையராக பணியில் இருந்த செல்வகுமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்.இதேபோல், கோவை மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சுஜித்குமார் மதுரை மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மூன்று அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து கோவைக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் அருளரசு கோவை மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக சிபிசிஐடி கூடுதல் துணை ஆணையராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.இதேபோல திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஎஸ்பி.,யாக இருந்த செல்வகுமார் கோவை மாநகர தலைமையக துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க