• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கோட்டக் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சார்பில் நிவாரணம்

July 10, 2020 தண்டோரா குழு

கோவையில் கோட்டக் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சார்பில் 200 ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 31ம் தேதி வரை பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதற்கிடையில் கொரோனா வைரஸால் பல்வேறு குடும்பங்கள் வறுமையில் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு சமூக அமைப்பினர் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை கோட்டக் ஆயுள் காப்பீட்டு (APC) நிறுவனம் சார்பாக 200 ஏழை எளிய மக்களுக்கு தலா ரூபாய் 600 மதிப்பிலான அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் வடவள்ளி காவல்துறை ஆய்வாளர் மணிவண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்வில்,கோட்டக் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கோவை கிளை தலைவர் மதன் குமார், துணை தலைவர்கள் சஞ்சய், பிரதீப் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க