• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு மருத்துவமனையில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

July 9, 2020 தண்டோரா குழு

அரசு மருத்துவமனையில் செல்போன் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள்
பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.இதில் உள் நோயாளிகள் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் செல்போன் திருடு போவதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் இன்று பாலக்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ஏழு செல்போன்களை பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரனையில் இவர் கடந்த இரண்டு வருடங்களாக அடுமனை ஒன்றில் பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார். ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இருந்தவர் அரசு மருத்துவமனை வளாகம் அருகில் தங்கி அம்மா உணவகத்தில் இலவச உணவு உட்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அரசு மருத்துவமனையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டபோது அவரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் இது குறித்து தெரிவித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ரமேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருக்கும் உதவியாளர்களிடம் இருந்து செல்போன்களை திருடுவதை வழக்கமாக கொண்டு இருப்பது தெரிய வந்தது.மேலும் அவரிடமிருந்து ஏழு செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க