• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது – மொத்த பாதிப்பு 1,026 ஆக உயர்வு !

July 9, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1026 ஆக உயர்ந்துள்ளது.இறப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பபட்டுள்ளது.

அதன்படி கோவை, குறிச்சியில் செயல்படும் தனியார் கம்பெனியில் பணியாற்றும் 8 பேர், செல்வபுரம் சாவித்திரி நகரை சேர்ந்த 4 பேர்,100 அடி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடை ஊழியர்கள் இருவர், மொபைல் கடை ஒன்றில் பணியாற்றும் ஒருவர் என 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோவை சுந்தராபுரம், பி.என்.பாளையம் வஞ்சிமாநகர், ரெட்பீல்ட்ஸ், வரதராஜபுரம், சவுரிபாளையம், பேரூர் செட்டிபாளையம், சுக்கிரவார்பேட்டை, காந்திபார்க், விநாயகபுரம், எல்.ஐ.சி.,காலனி, சின்னியம்பாளையம், கவுண்டம்பாளையம், ஆர்.எஸ்.புரம், தெலுங்குபாளையம், வடவள்ளி, காமராஜ் ரோடு, கருமத்தம்பட்டி, சுகுணாபுரம், ஜி.என்.மில்ஸ், குரும்பர் லேன், எஸ்.எஸ்.குளம், புலியகுளம், ராஜாவீதி, அவினாசி ரோட்டில் உள்ள தண்டுமாரியம்மன் கோவில் வீதி, என மொத்தம் 50 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. இதில், 39 ஆண்கள் 11 பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் கோவை மாவட்டத்தில்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 1,026 ஆக உயர்ந்தது. மேலும், இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில்
கோவையை சேர்ந்த இருவர் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

மேலும் படிக்க