• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊஞ்சலில் விளையாடிய சிறுமி துண்டு கழுத்தில் இறுகி உயிரிழப்பு !

July 9, 2020 தண்டோரா குழு

ஊஞ்சலில் விளையாடிய சிறுமி துண்டு கழுத்தில் இறுகி மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சிங்காநல்லூர் அருகில் உள்ள நீலிக்கோணாம்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர்.அருள்ஞான ஜோன்ஸ்-நிஷா.
அருள்ஞான ஜோன்ஸ்வளைகுடா நாட்டில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.தற்போது கொரோனா தொற்று காரணமாக கோவை வந்துள்ளார்.இவரது மனைவி நிஷா அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இத்தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.இவர்களது மகள் ஜெர்லின் மேகா(9)தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் உள்ள ஊஞ்சலில் சிறுமி விளையாடி வந்துள்ளார். இவரது பெற்றோர்கள் வீட்டின் உறங்கி கொண்டு இருந்தனர்.ஊஞ்சலில் உள்ள இரும்பு சங்கிலியில் ஒரு துண்டை கட்டி ஏறி விளையாடிய போது துண்டு சிறுமியின் கழுத்தை சுற்றி இறுகியதில் மரணம் அடைந்துள்ளார். தற்செயலாக சிறுது நேரம் கழித்து வெளியில் வந்த பார்த்த பெற்றோர்கள் மகள் ஊஞ்சலில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து சிறுமியை சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறயுள்ளனர்.இதனை கேட்டு பெற்றோர்கள் கதறி அழுதனர்.சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை மருத்துவமனையில் வைக்கபட்டு உள்ளது.ஊஞ்சலில் துண்டு இறுகி சிறுமி இறந்த சம்பவம் அருகில் வாசிப்பவர்கள் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க