• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு !

July 9, 2020 தண்டோரா குழு

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கருர் மாவட்டத்தை சேர்ந்த 80 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவையில் கொரொனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்குகிறது.மாவட்டத்தில் தற்போது வரை 927 பேர் வைரஸ் தொற்றால் பாதித்துள்ள நிலையில் 20க்கு மேற்பட்ட பகுதிகள் தனிமைபடுத்தபட்டுள்ளன.அண்மை காலமாக கொரொனா பாதிப்பு என்பது கொத்துக் கொத்தாக ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.மேலும் கோவை மாவட்டத்தை பொருத்தவரை 3 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால்கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தொற்று பாதிப்பால் தனியார் (பிஎஸ்ஜி) மருத்துவமனையில் 18 நாட்களாக சிகிச்சை பெற்ற முதியவர், ஆபத்தான நிலையில் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் முதியவர் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க