• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் டாஸ்மாக் விற்பனையாளருக்கு கொரோனா உறுதி – மது பிரியர்கள் அதிர்ச்சி

July 7, 2020 தண்டோரா குழு

கோவை வடவள்ளி அடுத்த வீரகேளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை விற்பனையாளருக்கு கொரோனா உறுதியானதால், கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவை வடவள்ளி அருகே உள்ள வீரகேளம் பகுதியில் செயல்பட்டு வந்த (1633) டாஸ்மாக் கடையில் பணியாற்றி வந்த விற்பனையாளருக்கு உடல் நலம் குறைவு காரணமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து இன்று அவர் ஆம்புலென்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொடிசியா அழைத்துச்செல்லப்பட்டார்.

இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் டாஸ்மாக் கடை அருகே கிருமி நாசினிகளை தெளித்தனர். மேலும் கடையில் மேற்பார்வையாளர், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.வீரகேரளம் டாஸ்மாக் கடை விற்பனையாளருக்கு கொரோனா உறுதியான சம்பவம் அங்கு மது வாங்கி சென்ற மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க