• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பெண்ணின் மொபைலுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆட்டோ ஓட்டுநர் கைது

July 7, 2020 தண்டோரா குழு

கோவையில் பெண்ணின் மொபைல் எண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கோவை கணபதி பாலாஜி லே-அவுட்டை சேர்ந்தவர் காளிமுத்து 45. இவர் ரத்தினபுரியை சேர்ந்த ஒரு தம்பதியரின் குழந்தைகளை கடந்த 8 ஆண்டுகளாக பள்ளிக்கு தனது ஆட்டோவில் அழைத்துச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்ணிற்கு ஆட்டோ ஓட்டுனரான காளிமுத்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இதுகுறித்து, அந்த பெண் காளிமுத்துவிடம் கேட்டபோது அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.பின்னர் இது குறித்து அந்த பெண் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெண்ணின் புகாரை தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணைக்குப் பின் காளிமுத்துவை கைது செய்தனர்.

மேலும் படிக்க