• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இன்று ஒரேநாளில் 67 பேருக்கு கொரோனா தொற்று – 40 பேர் டிஸ்சார்ஜ் !

July 6, 2020 தண்டோரா குழு

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று வரை தொற்று எண்ணிக்கை 741 ஆக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிக அதிகபட்சமாக செல்வபுரம் அய்யப்பா நகர் பகுதியில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர்பட்டறை தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களாவர்.

மேலும், பிஆர்எஸ் குடியிருப்பில் வசிக்கும் 29 வயது ஆயுதப்படை ஆண் காவலர், ரத்தினபுரி பகுதியில் 3 பேர் வடவள்ளி, சிங்காநல்லூர், பொள்ளாச்சி, கணபதி மாநகர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், பீளமேடு, சின்னியம்பாளையம், வீரபாண்டி, கணபதி, ஒத்தக்கால்மண்டபம், சரவணம்பட்டி, டவுன்ஹால், மேட்டுப்பாளையம் சாலை, கே.கே.புதூர், உக்கடம், கே.ஜி.வீதி, நாடர் வீதி, வெள்ளலூர், பெரியநாய்க்கன்பாளையம், கே.ஜி.மருத்துவமனை, ஒண்டிபுதூர், கருமத்தம்பட்டி, பி.என்.பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு
கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 802 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 2 குழந்தைகள், 12 பெண்கள்,26 ஆண்கள் என 40 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும்,கொரோனா தொற்று பாதித்த 349 பேர் தற்போது கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க