• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இன்று அரசு மருத்துவர், 2 வயது குழந்தை உட்பட 34 பேருக்கு கொரோனா தொற்று

July 3, 2020 தண்டோரா குழு

கோவையில் இன்று கோவை அரசு மருத்துவமனை மருத்துவர் உள்பட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

கோவையில் இன்று கோவை அரசு மருத்துவமனை மயக்க மருந்தியியல் துறை மருத்துவர், கோவை சுங்கம் பகுதியை சேர்ந்த 32 வயது பெண் டாக்டர், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த காரமடையை சேர்ந்த 50 வயது நோயாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

மேலும், ஆர்.எஸ்.புரம் டி.வி சாமி ரோடு, கீரின்பார்க் அபார்ட்மெண்ட், வி.சி.வி லே-அவுட் ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பேருக்கும், உக்கடம் ஹவுசிங்யூனிட், சி.எம்.சி காலனி, தர்மராஜர் கோயில் வீதி பகுதியை சேர்ந்த 4 பேருக்கும், நேரு நகரை சேர்ந்த 2 வயது குழந்தை உள்பட 3 பேருக்கும், கணபதியை சேர்ந்த 46 வயது ஆண், ஒத்தக்கால் மண்டபம் சேர்ந்த 34 வயது ஆண், கஸ்தூரி நாயக்கன்பாளையம் 40 வயது ஆண்,ஆடிஸ் வீதியை சேர்ந்த 54 வயது பெண், காளப்பட்டி சிறுமுருகன் நகரை சேர்ந்த 13 வயது சிறுவன், ராமநாதபுரம் சேர்ந்த 65 வயது ஆண், என்.எஸ்.என்-பாளையம் சேர்ந்த 38 வயது ஆண், பீளமேடு லட்சுமி புரம் சேர்ந்த 33 வயது ஆண், சேரன்மாநகர் உமா மகேஸ்வரி நகரை சேர்ந்த 56 வயது ஆண், ஒண்டிப்புதூர் சேர்ந்த 68 வயது ஆண், இடிக்கரை சேர்ந்த 38 வயது ஆண், சரவணம்பட்டி சேர்ந்த 36 வயது ஆண், நியூ சித்தாபுதூர் சேர்ந்த 32 வயது ஆண், காளப்பட்டி சேர்ந்த 36 வயது, 26 வயது ஆண், சாய்பாபாகாலனியை சேர்ந்த 40 வயது ஆண், பெரியநாயக்கன்பாளையம் சேர்ந்த 59 வயது ஆண், சின்னியம்பாளையம் சேர்ந்த 55 வயது ஆண் என மொத்தம் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்டோர் கோவை இ.எஸ்.ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 645 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம் இன்று 252 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, 391 பேர் இ.எஸ்ஐ மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க