• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

July 3, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 2,082
பேருக்கு தொற்று உறுதி செய்ய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களில் 64 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,385 ஆக உள்ளது.
அதேசமயம் இன்று மட்டும் 2,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58, 378 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் முதல் 50 ஆயிரம் கொரோனா பாதிப்பு 103 நாள்களிலும் அடுத்த 50 ஆயிரம் பாதிப்பு வெறும் 16 நாள்களிலும் ஏற்பட்டிருக்கிறது.இதனால், நாட்டிலேயே கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டிய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க