July 3, 2020
தண்டோரா குழு
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரானா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் தமுமுக சார்பில் முழு பாதுகாப்புடன் கோவையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஊட்டியை சேர்ந்த முதியவர் 63 வயது ஒருவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்நிலையில்,அவரது உடல் கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அமைப்பின் சார்பாக முழு பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கொரானா என்றாலே பயத்தில் இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் ஒருவர் கொரானா நோயால் இறந்துவிட்டார் என்றாலே அக்கம்பக்கம் சொந்த பந்தம் யாரும் வர மறுக்கும் பட்சத்தில் மனித நேயத்தோடு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் உடனிருந்து உரிய மரியாதை செய்து நல்லடக்கம் செய்தார்கள். இதுவரை தமிழகம் முழுவதும் 186 க்கும் மேற்பட்ட கொரானா நோயால் இறந்தவர்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.