• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 600ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு !

July 2, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி
இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் பணியாற்றி வரும் மூன்று ஆண்கள், பீளமேடு, ஸ்ரீ நகரை சேர்ந்த 21 வயது ஆண்,தெலுங்கு பாளையம் தனியார் அபார்ட்மென்ட்டில் வசிக்கும் 25, 35 வயது ஆண், இடிகரையை சேர்ந்த 50 வயது பெண், சிங்காநல்லுார் கோத்தகிரி கார்டனை சேர்ந்த 23 வயது ஆண், பி.என்.புதுாரை சேர்ந்த, 73 வயது மூதாட்டி, செல்வபுரம் சரோஜினி நகரை சேர்ந்த 21 வயது பெண், ஜோதிபுரத்தை சேர்ந்த 40 வயது ஆண், கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 45 வயது நபர் என மொத்தம் 13 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம்,கொரோனாவால் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 37 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்சமயம், 279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க