July 1, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த,பிரத்தி யேகமாக 20 அதிவிரைவுப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர், மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் கூறுகையில்,
ஒவ்வொரு மண்டலத்திற்கும் நான்கு படைகள் செயல்படும். அவர்கள், அந்தந்தப் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள மக்களை கண்காணிக்கவும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை கண்காணிப்பார்கள். ஆகவே வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.மேலும் பொதுமக்கள் தாங்கள் அதிவிரைவு படையின் கண்காணிப்பில் இருப்பதை உணர்ந்து,கோவை மாநகராட்சிக்கு, கொரோனா வைரஸ் தடுக்க போதிய ஒத்துழைப்பை தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.