• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதுக்கரை அருகே சிறுத்தை தாக்கி பட்டி ஆடுகள் பலி

July 1, 2020 தண்டோரா குழு

கோவை மதுக்கரை வனப்பகுதி அருகே மெய்தீன் என்பவரது பட்டிக்குள் புகுந்த சிறுத்தை 4 ஆடுகளை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

கோவை மதுக்கரை குவாரி ஆபிஸ் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சஹிலா மொய்தீன். இவர் வீட்டில் பட்டி அமைத்து 6 ஆடுகள் வளர்த்தி வந்தார். கடந்த வாரம் பட்டியில் இருந்த ஒரு ஆடு மாயமானதாக தெரிகிறது. மர்ம நபர்கள் திருடிச்சென்றிருக்கலாம் என நினைத்து உரிமையாளர் சஹிலா பட்டியை நன்றாக அடைத்து வைத்திந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் பட்டிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று உள்ளே ஆடுகளை கடித்து இழுத்துச்செல்ல முயன்றுள்ளது. ஆனால் சத்தம் கேட்டு உரிமையாளர் வெளியே வந்ததால் ஆடுகளை அங்கேயே விட்டுவிட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடியுள்ளது. இதையடுத்து பட்டிக்குள் பார்த்த போது இரண்டு ஆடுகள் இறந்த நிலையில் இரண்டு ஆடுகள் கழுத்தி படுகாயங்களுடனும் கிடந்ததுள்ளது.

இதையடுத்து காயமடைந்த ஆடுகளுக்கு அருகே இருந்த கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை கால் தடங்களை உறுதி செய்தனர். மேலும் அங்கு தானியங்கி கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய உள்ளனர்.

மேலும் படிக்க