June 30, 2020
தண்டோரா குழு
கோவையில் இளம் பெண்ணுக்கு முதியவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் அப்பெண் சாணிபவுடர் குடித்துள்ளார்.
இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தவர் ராஜன்(55). இவர் கடந்த 20 வருடமாக தமிழக அரசின் நிரந்தர பணியாளனாக இருக்கின்றார். 28 வயதுடைய பெண் ஒருவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக ஒப்பந்தப் பணியாளராக இருகூர் பேராட்சி பேரூராட்சியில் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றார்.
இதற்கிடையில்,ராஜன் அப்பெண் வாகனத்தில் வரும் போதும் தனிமையில் இருக்கும் போதும் அவ்வப்போது சீண்டி தொந்தரவு கொடுத்துள்ளான்.இன்று வழக்கம்போல் பணிக்கு சென்றிருக்கிறார்.இந்நிலையில்,ராஜதுரை அவர் வீட்டின் அருகாமையில் பணி இருப்பதாக அழைத்துச் சென்று இன்று என் வீட்டில் யாரும் இல்லை நீ உள்ளே வா என்று 28 வயது இளம்பெண்ணை சீண்டி தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளான். பின்னர் பயந்து அந்த பகுதியில் இருந்து வீட்டுக்கு சென்ற அப்பெண் சானி பவுடரைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இச்சம்பவம் அறிந்த சுற்றத்தினர் குற்றச் சம்பவத்தை போலீசில் தகவல் கொடுத்த வேளையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து உதவினர்.குற்றம் சுமத்தப்பட்ட இராஜதுரையிடம் போலிஸ் உரிய விசாரணை நடத்த பெண் தரப்பில் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.