• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 428 ஆக உயர்வு !

June 27, 2020 தண்டோரா குழு

கோவையில் இன்று ஒரேநாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 428 ஆக உயர்ந்துள்ளது.

கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் செயல்படும் எம்.ஜி.,ஆர் மார்க்கெட்டில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 46 வயது நபருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல்,பூ மார்க்கெட்டை சேர்ந்த 36 வயது பெண், கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருக்கும், 22 வயது பெண் என இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும்,குனியமுத்தூரில் வசிக்கும், புதிய தமிழக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின்மனைவி 65, கோவை, சூலுாரை சேர்ந்த 16 வயது பெண், கே.கே.புதூரை சேர்ந்த 26 வயது பெண், காமராஜர் வீதி கே.கே.புதூரை சேர்ந்த 23,45,48 வயது ஆண்கள், ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த 27 வயது ஆண், செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்த 45 வயது பெண், இடையர்பாளையம், காவேரி நகரை சேர்ந்த 52 வயது ஆண், சரவணம்பட்டி, பெரியார் வீதியை சேர்ந்த 50 வயது ஆண், துடியலுார் மதுரை கோணார் மெஸ்சில் பணி புரியும், 22,25,21,29 வயது ஆண்கள், துடியலுார், விஸ்வநாதபுரத்தை சேர்ந்த 28, 29 வயது ஆண், பெண். இருகூர், காமாட்சிபுரத்தை சேர்ந்த 31 வயது பெண், பி.கே.புதூரை சேர்ந்த 37 வயது ஆண், கோட்டூரை சேர்ந்த 27 வயது ஆண், 65 வயது பெண், 10 வயது சிறுவன் மற்றும் டவுன்ஹால் உப்பர் வீதியை சேர்ந்த 32 வயது ஆண், என மொத்தம் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோர்
கோவை இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், கோவையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 393ல் இருந்து 428 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனாவில் இருந்து இன்று 43 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்சமயம் 224 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க