• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 393 ஆக உயர்வு !

June 26, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 393 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று கோவை நேருநகர், கணபதியை சேர்ந்த 40 மற்றும் 48 வயது ஆண்கள், ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த 56 வயது ஆண், ராமநாதபுரத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை, ஒண்டிப்புதுாரை சேர்ந்த 34, 54 வயது ஆண் பெண், விஸ்வாசபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது பெண், சுந்தரபுரத்தை சேர்ந்த 31 வயது பெண்,ரத்தினபுரியை சேர்ந்த 47 வயது ஆண், வீரபாண்டி பிரிவை சேர்ந்த 33 வயது பெண், காரமடையை சேர்ந்த 63 வயது மூதாட்டி, புதுப்பாளையத்தை சேர்ந்த 45 வயது ஆண், ஆர்.எஸ்.புரத்தில் தனியார் குடியிருப்பில் வசிக்கும், 30, 53 வயது பெண்கள் மற்றும் 55 வயது ஆணுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கே.கே.புதுாரை சேர்ந்த 48, 20 வயது பெண்கள் 10 வயது சிறுவன் மற்றும் 24 வயது ஆண்,கோவில்மேடு பகுதியை சேர்ந்த 37 வயது பெண், இருகூர் பகுதியை சேர்ந்த 37 வயது ஆண், தெலுங்கு வீதியை சேர்ந்த 55, 47,60 வயது பெண்கள், 68, 39 வயது ஆண்கள், காந்திபுரம் பட்டேல் ரோட்டை சேர்ந்த 49 வயது ஆண், அசோக புரத்தை சேர்ந்த 51 வயது ஆண், காமராஜர் வீதி, கே.கே.புதுாரை சேர்ந்த 21, 34 வயது ஆண்கள், 19, 40 வயது பெண்கள் மற்றும் சண்முக ராஜபுரத்தை சேர்ந்த 49 வயது ஆண் என ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோர்இ .எஸ்.ஐ., மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 347ல் இருந்து 393 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் இன்று பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க