• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா விழிப்புணர்வு சிற்பத்தை வடிவமைத்து அசத்திய தங்க நகை பட்டறை தொழிலாளி

June 24, 2020 தண்டோரா குழு

சுமப்பதும் ஒழிப்பதும் நம் கையில் தான் உள்ளது என்று ஒரு கிராம் வெள்ளியில் கொரோனா விழிப்புணர்வு சிற்பத்தை வடிவமைத்துள்ளார் தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம்.ஒரு கிராம் தங்கத்தில் பல்வேறு சிற்பங்களை செய்துள்ள ராஜா தற்போது கொரோனா விழிப்புணர்வு குறித்து 1 கிராம் வெள்ளியில் கொரோனா தொற்றை சுமப்பதும் ஒழிப்பதும் நம் கையில் தான் உள்ளது என்பதை வலியுறுத்தி உலக உருண்டையை அட்லஸ் சுமப்பது போல் வடிவமைத்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், இதில் இருந்து நம்மை நாமே காப்பாற்றி கொள்ள முடியும் என்பதை வலியுறுத்தி இதனை வடிவமைத்ததாக தெரிவித்தார்.என்ன தான் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் தனி மனித ஒழுக்கமே இதில் பின்பற்றப் பட வேண்டும் என்றார். மேலும், முக கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுதல் கைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் எனவும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இதனை வடிவமைத்ததாக தெரிவித்தார்

மேலும் படிக்க