• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 292 ஆக உயர்வு

June 23, 2020 தண்டோரா

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 292 ஆக உயர்ந்துள்ளது.

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த 52 வயது பெண்,கோவை வெள்ளலுார் மத்திய அதிவிரைவுப்படையில் பணியாற்றி வரும் 50 போலீஸ், பெங்களூரு விமானத்தில் வந்த சூலுார் விமானப்படை தளத்தை சேர்ந்த 22 வயது இளைஞர், ரத்தினபுரியை சேரந்த 40 வயது ஆண், டில்லியில் இருந்து விமானத்தில் வந்த செட்டிபாளையத்தை சேர்ந்த 30 மற்றும் 19 வயது இளைஞர்கள், குஜராத்தில் இருந்து வந்த பீளமேட்டை சேர்ந்த 29 வயது இளைஞர், ஆகியோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் வேலாண்டிபாளையத்தை சேர்ந்த 72 வயது பெண், தெலுங்கு பாளையத்தை சேர்ந்த 32 வயது ஆண் பெண் இருவர், ஒண்டிப்புதுாரை சேர்ந்த 39 வயது ஆண், காந்திபூங்காவை சேர்ந்த 56 வயது ஆண், குருடம்பாளையத்தை சேர்ந்த 56 வயது ஆண், சூலுார் குமரன் நகரை சேர்ந்த 54 வயது ஆண், பெ.நா.பாளையத்தை சேர்ந்த 49 வயது ஆண், குனியமுத்தூரை சேர்ந்த 40 வயது ஆண், கரும்புக்கடையை சேர்ந்த 55 வயது ஆண், செல்வபுரத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி, பொள்ளாச்சியை சேர்ந்த 35 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து,கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம்,கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 292 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம்,கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருபவர்களில் 8 ஆண்கள்,4 பெண்கள், ஒரு திருநங்கை உள்பட 13 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க