• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இருந்து 48 பேர் திரிபுரா மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு

June 23, 2020 தண்டோரா குழு

கோவையில் இருந்து திரிபுரா மாநிலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 48பேர் அனுப்பபட்டனர்.

கோவை மாவட்டத்தில் இருந்து புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களை, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு இரயில்களின் மூலமாக சுமார் 50 ஆயிரம் பேருக்கும் மேலாக,ஜார்க்கண்ட், பீகார் ஒரிசா, மத்திய பிரதேசம்,போன்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த நிலையில் கோவை மாவட்டதில் உள்ள, போடிபாளையம், பகுதியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த திரிபுரா மாநில இளைஞர்கள் 48 பேர் தங்களின் ஊர்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்,இது குறித்து திரிபுரா மாநில அரசிடம் பேசி அவர்களுக்கு அனுமதி பெற்றனர். இதனை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து, இரவு 11 மணிக்கு திரிபுரா மாநிலத்திற்க்கு செல்லும் சிறப்பு இரயில் மூலம் செல்ல, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சிறப்பு இரண்டு பேருந்துகள் மூலமாக, சென்னைக்கு அனுப்பப்பட்டனர். முன்னதாக சமூக இடைவெளி விட்டு அவர்களை வரிசைப்படுத்தி அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கொண்டு அவர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்ய பட்டது இதனை தொடர்ந்து, அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உணவு, தண்ணீர் பாட்டில் வழங்கி பேருந்துகளில் ஏற்றி சென்னை க்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க