• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்

June 20, 2020 தண்டோரா குழு

கோவை உக்கடம் பகுதியில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் துவக்கி வைத்தார்.இதன் பின்னர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்,முக கவசங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கபட்டது.

இது குறித்து ஒருங்கிணைபாளர்கள் கூறுகையில்,

கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் இருக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூன்று ஆட்டோக்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும் உக்கடம், கரும்புகடை, குனியமுத்தூர், ஆத்துபாலம், சுந்தராபுரம்,செல்வபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளபட இருப்பதாக தெரிவித்தனர். இன்று மட்டும் ஐயாயிரம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்க உள்ளதாகவும் மூவாயிரம் முக கவசங்கள் வழங்க உள்ளதாகவும் மேலும் தேவைபடும் மக்களுக்கு விநியோகம் செய்யபட உள்ளதாகவும் அப்போது தெரிவித்தனர்.

மேலும் படிக்க