June 19, 2020
தண்டோரா குழு
கோவையில் சிறு குறு, நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி, மற்றும் தொழிற்கடன் பற்றிய கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில், பல்வேறு காரணங்களால் சிறு குறு,தொழிற்சாலைகள் மீண்டும் இயங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில், மாவட்ட ஆட்சியர் இராசாமணி,மாநகராட்சி ஆணையாளர் ஷர்வணகுமார் ஜடாவத், மற்றும் அரசு அதிகாரிகள், துறை பிரிவு அலுவலர்கள், மற்றும் வங்கிமேலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் வாயிலாக, சிறு குறு அமைப்பினரின் பல கேள்விகளுக்கு தீர்வுகள் பெறும் வகையில் அனைத்து அதிகாரிகளும் கலந்தாலோசனை நடத்தினர். இதில் சிறு குறு நிறுவனங்கள் மீண்டும் இயக்க, தொழிலாளர்கள் பற்றாக்குறை, மற்றும் மின்சாரதுறையின் மின் கட்டனம் மற்றும் வங்கி கடன் வழங்குவது தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை, அதிகாரிகளின் முன்னிலையில் சிறு, குறு அமைப்பினர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.