• Download mobile app
06 Jun 2025, FridayEdition - 3404
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இன்று 3 வயது குழந்தைகள் இருவர் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

June 18, 2020 தண்டோரா குழு

கோவையில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை ஆர்.ஜி.புதுாரை சேர்ந்த 27 வயது இளைஞர் அண்மையில்கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதையடுத்து இளைஞர் வசித்து வந்த பகுதி,கொரோனா கட்டுப்படுத்துதல் மண்டலத்துக்குள் கொண்டு வரப்பட்டு, தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பரிசோதனையில், அப்பகுதியில் வசிக்கும் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், இன்று வெளியான பரிசோதனை முடிவில் அப்பகுதியில் வசிக்கும் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும்,நீலகிரியில் இருந்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 54 வயது ஆண், தெலுங்குபாளையத்தை சேர்ந்த 33 வயது ஆண், போத்தனுாரை சேர்ந்த 82 வயது மூதாட்டி, சிதன்புரத்தை சேர்ந்த 39 வயது ஆண், கணுவாயை சேர்ந்த 65 வயது மூதாட்டி, சமத்தூரை சேர்ந்த 70 வயது முதியவர், சுங்கம் பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர், சுபிகவுண்டன்புதுாரைச் சேர்ந்த 82 வயது முதியவர், சரவணம்பட்டியை சேர்ந்த 27 வயது இளைஞர், உடையாம்பாளையத்தை சேர்ந்த 39 வயது பெண்ணுக்கு இன்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அதைப்போல், சென்னையில் இருந்து வந்த, உடையாம்பளையம் மற்றும் நடுபுனி பகுதியை சேர்ந்த 3 வயது ஆண் பெண் குழந்தைகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவகள் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் 30 நாட்களுக்கு பிறகு மீண்டும் #Quarantine_zone உருவாகியது. மொத்த பாதிப்பு – 211பேர், குணமடைந்தது – 161பேர்,சிகிச்சையில் – 48 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க