• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற கோரி ஆர்ப்பாட்டம்

June 18, 2020 தண்டோரா குழு

பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற கோரி கோவையில் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீண்ட நாட்களாக தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் தங்களது ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசானை பிறப்பிக்க வேண்டி மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் சார்பாக கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

முக கவசம்,அணிந்து,சமூக இடைவெளியுடன் நடந்த இதில் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் தலைவர் மனு நீதி சோழன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை SC பட்டியிலில் இருந்து நீக்கி MBC பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,தொடர்ந்து தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய இளைஞர்களை கூலி படையால் கொலைசெய்பவர்களை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் பேரவை நிர்வாகிகள் முருகராஜ், ராஜேந்திரசோழன், மணிமாறன், கிருஷ்ணமூர்த்தி,தீனா,சிவகுரு, மகேஷ், பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க