June 17, 2020
தண்டோரா குழு
இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் மற்றும் கல்வான் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரிடையே நேற்று நடைபெற்ற மோதலில் இந்தியாவை சார்ந்த 20 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
அந்த சம்பவத்தில் சீன ராணுவத்தினரும் பலியாகினர்.
இந்த நிலையில் மோதலில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை பஜக அலுவலகத்தில் நடைபெற்றது.அதில் கலந்து கொண்ட பாஜகவினர் இறந்த வீரர்களின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து சீன ராணுவத்தினரின் அத்து
மீறும் செயலை கண்டிக்கும் விதமாக சீன வரை படம் மற்றும் சீன தேசிய கொடியை எரிக்க முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சீன கொடி மற்றும் வரைபடத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், பாஜகவினர் சீன செல்போனை தரையில் வீசி உடைத்தனர். இதனிடையே இந்து மக்கள் கட்சியினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு சீன கொடியை கிழிக்க முயன்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.