• Download mobile app
10 May 2026, SundayEdition - 3742
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிரதமர் திட்டத்தின் கீழ் பணம் வாங்கி தருவதாக கூறி நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர் கைது

June 16, 2020 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் பெரியவர்கள் மூதாட்டிகள் போன்றவர்களிடம் பிரதமர் திட்டத்தின் கீழ் பணம் வாங்கி தருவதாக கூறி நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.

கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் வயதான பெண்கள் மூதாட்டிகள் போன்றவர்களிடம் பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் பணம் வாங்கித் தருவதாகவும் அதற்கு அணிந்திருக்கும் நகைகளை எல்லாம் கலட்டி வைத்தால்தான் பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறி பலபேரிடம் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். இச்சம்பவங்கள் குறித்து பலமுறை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது புகாரின் பேரில் பல நாட்களாக விசாரணை நடத்தி வந்த பந்தய சாலை காவல்துறையினர் இன்று அந்த கொள்ளையனை கையும் களவுமாக கோவை அரசு மருத்துவமனையில் பிடித்தனர்.

அவனிடமிருந்து 8 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுகுறித்து அவனிடம் விசாரணை நடத்துகையில் அவன் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சித்திரவேல் என்பதும் கோவை மட்டுமின்றி கள்ளக்குறிச்சி பழனி சென்னை ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல இடங்களில் இதே போன்று கொள்ளையடித்து உள்ளதும் அவன் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவனை சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க