• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஜி.எச்சில் இ.என்.டி வார்டு மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றம்

June 15, 2020 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் இ.என்.டி வார்டு மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 9ம் தேதியன்று தொண்டை காது மூக்கு சிகிச்சை வார்டில் தொண்டைப் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கொரானா உறுதியானது.அதனைத் தொடர்ந்து அவர் கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் தொண்டை காது மூக்கு சிகிச்சை வார்டு மூடப்பட்டது.அதுவரை அந்த வார்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவ சிகிச்சைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் மருத்துவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது அதில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.இதனை தொடர்ந்து இன்று முதல் கோவை அரசு மருத்துவமனையில் தொண்டை காது மூக்கு சிகிச்சை வார்டு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றம் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க