• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஜி.எச்சில் இ.என்.டி வார்டு மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றம்

June 15, 2020 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் இ.என்.டி வார்டு மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 9ம் தேதியன்று தொண்டை காது மூக்கு சிகிச்சை வார்டில் தொண்டைப் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கொரானா உறுதியானது.அதனைத் தொடர்ந்து அவர் கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் தொண்டை காது மூக்கு சிகிச்சை வார்டு மூடப்பட்டது.அதுவரை அந்த வார்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவ சிகிச்சைகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் மருத்துவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது அதில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.இதனை தொடர்ந்து இன்று முதல் கோவை அரசு மருத்துவமனையில் தொண்டை காது மூக்கு சிகிச்சை வார்டு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றம் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க