• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 28 வயது இளைஞர் உயிரிழப்பு

June 15, 2020 தண்டோரா குழு

கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 28 வயது இளைஞர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் ராமர் கோவில் வீதி பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர். சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வந்தார்சென்னையில் இருந்து நேற்று முன்தினம் கோவை வந்துள்ளார்.

சின்னியம்பாளையத்தில் தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.நேற்று அரசு மருத்துவமனையில் கொரொனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்கள் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் உயிரிழந்தார். இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை இல்லாத காரணத்தால் உயிரிழந்த இளைஞரின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபர் இவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க