June 14, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,974 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று புதிதாக 1,974 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதில் தமிழகத்தில் மட்டும் 1,941 பேருக்கும்,வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 33 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,415 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இதுவரை இல்லாத அளவாக தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் பலியாகியுள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் 22 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 435 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மொத்தம் 1,138 பேர் கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 24,547 பேர் குணமடைந்துள்ளனர்.