June 14, 2020
தண்டோரா குழு
தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த இந்தி நடிகர் சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்து
தொலைக்காட்சி தொடர் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானவர் சுஷாந்த் ராஜ்புத் ராஜ்புத்.ஹிந்தியில் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இவர், கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ். தோனியின் சுயசரிதை படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 34. அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சில நாட்களுக்கு முன்பு சுஷாந்தின் முன்னாள் மேலாளரான திஷா சேலியன் என்பவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.