• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை

June 13, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியதால், கோவை மாநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில், கனமழையும், பல இடங்களில் மிதமான மழையும் நிலவிவருகின்றது.

கேரளா மாநிலத்தில், தென்மேற்கு பருவமழையானது. கடந்த 1-ந் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தில் போதிய மழை பெய்யாமல் இருந்தாலும்,கோவை மாநகரில் நேற்று முதல் பலத்த மழை பெய்ய தொடங்கி உள்ளது.மேலும், கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், வடகோவை, வடவள்ளி, பூ மார்க்கெட், இரயில்வே நிலையம், காந்திபுரம், போன்ற பகுதிகளில், மிதமான மழை பெய்து வருகின்றது. காலை முதலே, லேசான மழை தூறலாக பெய்து வந்த நிலையில், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.

தொடர்ச்சியாக பல இடங்களில் கன மழை பெய்தது இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு வானிலை ஆய்வு மையம் சார்பில் 190மில்லி மீட்டர் அளவுக்கும் மேலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.இதனால் தொண்டாமுத்தூர் பகுதிகளில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க