• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் குழந்தை கடத்தல்

June 13, 2020 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் பிறப்புச் சான்றிதழ் வாங்கித் தருவதாக குழந்தையை கடத்தி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூரைச் சேர்ந்த செல்வராணி, செல்வம் என்ற தம்பதியினர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து பிரசவம் முடிந்து வீடு திரும்பிய நிலையில் நேற்றைய தினம் இரு ஆண் குழந்தைகளுக்கும் பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக திருப்பூரிலிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது மருத்துவமனை வளாகத்தில் இருந்த 25 மதிக்கத்தக்க பெண் ஒருவர் தான் பிறப்புச் சான்றிதழ் வாங்கித் தருவதாக கூறி செல்வராணியிடம் இருந்த ஒரு ஆண் குழந்தையை எடை போட வேண்டுமென்று வாங்கிச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அந்தப் பெண்மணியை காணவில்லை,

இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் இருந்த காவல் துறைக்கு தகவல் அளித்த பின் அங்கு விரைந்து வந்த ரேஸ்கோர்ஸ் காவல் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் துணை காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் தனிப்படை அமைத்து குழந்தையை கடத்திச் சென்ற பெண்மணியை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் குழந்தையை நூதன முறையில் கடத்தி சென்றது மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க