• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று – 18 பேர் உயிரிழப்பு

June 12, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று புதிதாக 1,982 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,479 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 18 பேர் பலியாகியுள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் பலியானோர் 8 பேர், அரசு மருத்துவமனையில் பலியானோர் 10 பேர். இதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், இன்று ஒரேநாளில் 1,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 22,047 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட 18,281 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 18,231 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.இதுவரை மொத்தம் 6,73,906 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க