• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ரேஸ்கோர்ஸில் ரூ.40 கோடி மதிப்பில் மாதிரி சாலை அமைக்கும் பணி துவக்கம்

June 12, 2020 தண்டோரா குழு

சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற மக்கள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் கொரோனா வேகமாக பரவும் எனவும், விரைவில் சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வருமெனவும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை பந்தயசாலை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடியே 70 இலட்ச ரூபாய் மதிப்பில் மாதிரி சாலை அமைப்பதற்கான பணிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பந்தயசாலை பகுதியில் 3 கி.மீ. தொலைவிற்கு நடைபாதை அமைக்கப்படும்.பூங்கா, விளையாட்டு உபகரணங்கள்,ஸ்மார்ட் பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்படும். தமிழகம் முழுவதும் பல்வேறு அடிப்படை வசதிகள், வளர்ச்சி பணிகளை முதலமைச்சர் செய்து தருகிறார். கோவை 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அடைந்துள்ளது.கோவை மாவட்டத்தில் இதற்கு முன்பிருந்த அரசு எதுவும் செய்யவில்லை, இதனை பொறுக்க முடியாமல் வரும் விமர்சனங்களை புறந்தள்ளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.தமிழகத்தில் சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற மக்கள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் கொரோனா வேகமாக பரவும் எனவும் அவர் தெரிவித்தார். சென்னையில் வீதி வீதியாக கொரோனா பரிசோதனை நடத்தப்படும் எனவும், விரைவில் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வரும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க