• Download mobile app
10 May 2026, SundayEdition - 3742
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இன்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

June 11, 2020 தண்டோரா குழு

கோவையில் சென்னையில் இருந்த வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பீளமேடு பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதுமட்டுமின்றி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நபருடன் தொடர்பில் இருந்ததால் வடவள்ளி பகுதியை சேர்ந்த 39 வயது பெண் மற்றும் 29 வயது பெண் ஆகியோருக்கு உறுதியானது. விழுப்புரத்தில் இருந்து வந்த பயணியிடம் தொடர்பில் இருந்ததால் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த 37 வயது பெண்ணிற்கு கொரோனா உறுதியானது. சென்னையில் இருந்து கோவை வந்த பீளமேடு பகுதியை சேர்ந்த நபரின் மனைவிக்கும்(32) கொரோனா உறுதியானது. இவர்கள் நான்கு பேரும் இ எஸ் ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் படிக்க