• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இன்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

June 11, 2020 தண்டோரா குழு

கோவையில் சென்னையில் இருந்த வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பீளமேடு பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அதுமட்டுமின்றி சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நபருடன் தொடர்பில் இருந்ததால் வடவள்ளி பகுதியை சேர்ந்த 39 வயது பெண் மற்றும் 29 வயது பெண் ஆகியோருக்கு உறுதியானது. விழுப்புரத்தில் இருந்து வந்த பயணியிடம் தொடர்பில் இருந்ததால் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த 37 வயது பெண்ணிற்கு கொரோனா உறுதியானது. சென்னையில் இருந்து கோவை வந்த பீளமேடு பகுதியை சேர்ந்த நபரின் மனைவிக்கும்(32) கொரோனா உறுதியானது. இவர்கள் நான்கு பேரும் இ எஸ் ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் படிக்க