• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உக்கடம் மீன் மார்க்கெட்டில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

June 10, 2020 தண்டோரா குழு

உக்கடம் மீன் மார்க்கெட்டில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகம் முழுவதும் காய்கறி சந்தைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் அதிகமாக கூடாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், மக்கள் தனிமனித இடைவெளியில்லாமல் கூட்டமாக அத்தியவாசிய பொருட்களை வாங்க கூடுவது வேதனையளிப்பதாக இருக்கிறது. கடந்த ஞாயிறன்று திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் மீன் வாங்க கூடியதை அடுத்து தமிழகம் முழுவதும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தமிழக அரசு வலியுறுத்தியது.

இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் கு ராசாமணி மற்றும் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஆகியோர் உக்கடம் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் படிக்க