• Download mobile app
10 May 2026, SundayEdition - 3742
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா பரவல் எதிரொலி – கோவையில் பந்தயசாலையில் நடைப்பயிற்சிக்கு தடை

June 9, 2020 தண்டோரா குழு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கோவை பந்தய சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ள தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஊரடங்கு தளர்வு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கோவைக்கு வெளியூரிலிருந்து வரக்கூடியவர்கள் வாயிலாக கொரனா தொற்று ஏற்பட தொடங்கியது. இதனால் பொதுமக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவது தொடங்கி மாஸ்க் அணிவது வரை பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக மாஸ்க் போட்டாமல் வெளியே வருவோர் மீது கடும் நடவடிக்கை மற்றும் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக கோவை மாநகராட்சியில் இதுவரை 4,00,000 ரூபாய் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதமாக வசூல் செய்யப்பட்டது.

இதற்கிடையில் ஊரடங்கிற்கு பின் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கோவை பந்தய சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனிடையே, நடைபயிற்சி மேற்கொள்ளும் பலர் முக கவசம் அணிவது இல்லை எனவும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை எனவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, மறு அறிவிப்பு வரை கோவை பந்தய சாலையில் நடைபயிற்சி பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், கோவையில் மீண்டும் கொரோனா தொற்று பரவி விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இன்று பந்தய சாலையில் அதிகாரிகள் பாதாகைகள் வைத்துள்ளனர்.

மேலும் படிக்க