• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜூன் 12ஆம் தேதி முதல் அரக்கோணம் – கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

June 9, 2020 தண்டோரா குழு

அரக்கோணம் – கோவை இடையே சிறப்பு ரெயில் ஜூன் 12-ம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும், ரெயில்வே நிர்வாகம் நாடு முழுவதும் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. தமிழக அரசு வெளி மாநிலங்களில் இருந்து வரும் சிறப்பு ரெயில்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.ஆனால் மாநிலத்திற்குள் நான்கு வழித்தடங்களில் ரெயில்களை இயக்க வேண்டுகோள் விடுத்தது.

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று திருச்சி – நாகர்கோவில் உள்பட நான்கு வழித்தடங்களில் ரெயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் ஜூலை 12-ந்தேதியில் இருந்து அரக்கோணம் – கோவை இடையே ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. மேலும் இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

அதேபோல், ஜூன் 12-ந்தேதி முதல் விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக செங்கல்பட்டிலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

மேலும் படிக்க