• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வழிபாட்டு தளங்களை திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

June 9, 2020 தண்டோரா குழு

வழிபாட்டு தளங்களை திறக்க கோரியும், மதுக்கடைகளை மூடக்கோரியும் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

கொரானா தொற்று அதிகரித்ததை அடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக வழிபாட்டுத் தளங்களை திறக்கக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுவதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இந்து மக்கள் கட்சியி சார்பில் சிவத்திரு பிரசன்ன சுவாமிகள் தலைமையில் கோவை கோனியம்மன் கோவில் முன் ஆலயம் திறப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது மதுக்கடைகளை மூடவும், வழிபாட்டுத்தலங்களை திறக்கவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர் பேசிய பிரசன்ன ஸ்வாமிகள்,

மதுக் கடைகள் நகைக் கடைகள் வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளை திறக்கும்போது வழிபாட்டுத் தலங்களை மட்டும் திறக்க அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும் தகுந்த பாதுகாப்புடன் மீண்டும் வழிபாட்டுத் தலங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

மேலும் படிக்க