• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரயில்வே ஊழியர்கள் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டம்

June 8, 2020 தண்டோரா குழு

மத்திய அரசின் ரயில்வே தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்து அகில இந்தியளவில் ரயில்வே ஊழியர்கள் கருப்பு உடையணிந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அகில இந்திய அளவில் ரயில்வே துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை குட்செட் சாலையிலுள்ள ரயில்வே பணிமனை முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசு ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடக்கோரியும், கொரொனாவை காரணம் காட்டி ஒரு மாதத்திற்கு 5 நாள் வீதம் ஜனவரி 2020 முதல் ஜீன் 2021 வரை 18 மாதத்திற்கு 3 மாதம் ஊதியத்தை பிடிக்க கூடாது என வலியுறுத்தினர். மேலும் 55, 000 முதல் 4 லட்ச ரூபாய் வரை பயணப்படி இழப்பு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் ஊதிய உயர்வு, இரவு பணிப்படி , வேலை நேரத்திற்கு மேல், அதிகம் வேலை செய்வதற்கான ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிடக்கோரி கடந்த ஜீன் 1 முதல் ஜீன் 8 வரை விழிப்புணர்வு வாரமாக கடைபிடித்து இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க