• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண் மருத்துவருக்கு தொல்லை கொடுத்தவரை தட்டி கேட்ட அண்ணனுக்கு அடி-உதை

June 6, 2020 தண்டோரா குழு

பெண் மருத்துவருக்கு தொல்லை கொடுத்தவரை தட்டி கேட்ட அண்ணனை அடித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்வபுரம் மார்டின் டெய்சன்
அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நாகராஜின் மகன் சூர்யகுமார். இவரது தங்கை நித்யா அக்குபஞ்சர் மருத்துவராக உள்ளார்.உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்த ஜாகீர் உசேன் மகன் நவ்பால் ரகுமான்(27). கடந்த சில தினங்களாக நித்யாவை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து தனது அண்ணன் சூர்யகுமாரிடம் நித்யா கூறியுள்ளார்.

நேற்று மாலை இது குறித்து நவ்பாலிடம் கேட்டபோது சூர்யகுமாரை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.மேலும் நித்தியாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து சூர்யகுமார் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து நவ்பால் ரகுமான் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணைக்கு பின் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க