• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முத்தண்ணன் குளத்திற்கு அருகேயுள்ள 992 வீடுகளை இடிக்கும் பணி துவக்கம்

June 6, 2020 தண்டோரா குழு

கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்திற்கு அருகே உள்ள வீடுகளை இடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

முத்தண்ணன் குளத்தை சுற்றி 1500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்கள் கடந்த 90 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இப்பகுதியில் பல்வேறு சுற்றுலா தொடர்பான பணிகள் நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், காபி கடை உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் இடம்பெயர டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து டோக்கன் பெற்ற 992 பேர்களின் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. மேலும் வீடுகளை காலி செய்யாத ஒரு சிலர் வீடுகளை காலி செய்து வருகின்றனர். இடிந்து விழும் நிலையிலுள்ள வீடுகளும் இடிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். டோக்கன் வழங்கப்படாத வீடுகள் இடிக்கப்படாது என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து இப்பணிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க