• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குழப்பும் கொரோனா கணக்கு – குழப்பத்தில் கோவை மக்கள்

June 4, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது.

கோவையை பொறுத்தவரையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 146 பேரில் 145 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்தார். இந்த சூழலில் 28 நாட்களுக்கு கடந்த 2ம் தேதி 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில், கோவையில் நேற்று மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும்
இதன் மூலம் கோவையில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளதாகவும் நேற்று சுகாதாரத்துறை அறிவித்தது. கோவையில் நேற்றைய பாதிப்பு -161
என்ற நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கோவையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 153 என தெரிவித்துள்ளது. இன்றைய கணக்கின் படி 8 பேர் மாயமாகி யுள்ளனர். இதனால் கோவை மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஏற்கனவே மொத்த பாதிப்பிற்கும், குணமடைந்தவர்கள், உயிரிழந்தோர் எண்ணிக்கைக்கும் ஒரு எண் குறைவாகவே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க