• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை தியாகி குமரன் மார்க்கெட்டிற்கு வரும்‌ பொதுமக்கள்‌,பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ குறித்து ஆய்வு!

June 4, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ தியாகி குமரன் மார்க்கெட்டிற்கு வரும்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ கடை உரிமையாளர்கள்‌ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும்‌ தனி அலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப.,தலைமையில்‌ மார்க்கெட்‌ வியாபாரிகள்‌, மற்றும்‌ அதிகாரிகளுடன்‌ கலந்தாய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ஆகியோர்‌ தெரிவித்ததாவது:

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட தியாகி குமரன்‌ மார்க்கெட்‌ பொதுமக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்களில்‌ ஒன்றாகும்‌. இப்பகுதியில்‌ உள்ள கடை உரிமையாளர்கள்‌ மற்றும்‌ வியாபாரிகள்‌ கட்டாயம்‌ போதிய சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும்‌.

அதேபோல, மார்க்கெட்டிற்கு வரும்‌ வாடிக்கையாளர்கள்‌ அனைவரும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிவதை உறுதி செய்ய வேண்டும்‌. வியாபாரிகள்‌ கிருமிநாசினி கொண்டு கைகளை நன்றாக சுத்தம்‌ செய்து கொள்ள வேண்டும்‌. கடை உரிமையாளர்கள்‌ மற்றும்‌ வியாபாரிகள்‌ தங்களது கடைக்கு வரும்‌ பொதுமக்களை போதிய சமூக இடைவெளியினை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும்‌.

மேலும்‌, மாநகராட்சியால்‌ வழங்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றாமல்‌ செயல்படும்‌ கடை உரிமையாளர்கள்‌ மற்றும்‌ வியாபாரிகள்‌ மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில்‌, மார்க்கெட்‌ கடை உரிமையாளர்கள்‌, நிர்வாகிகள்‌ மற்றும்‌ அதிகாரிகள்‌ கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க