• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தியாகி குமரன் மார்க்கெட்டிற்கு வரும்‌ பொதுமக்கள்‌,பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ குறித்து ஆய்வு!

June 4, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ தியாகி குமரன் மார்க்கெட்டிற்கு வரும்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ கடை உரிமையாளர்கள்‌ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும்‌ தனி அலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப.,தலைமையில்‌ மார்க்கெட்‌ வியாபாரிகள்‌, மற்றும்‌ அதிகாரிகளுடன்‌ கலந்தாய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ஆகியோர்‌ தெரிவித்ததாவது:

கோவை மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட தியாகி குமரன்‌ மார்க்கெட்‌ பொதுமக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்களில்‌ ஒன்றாகும்‌. இப்பகுதியில்‌ உள்ள கடை உரிமையாளர்கள்‌ மற்றும்‌ வியாபாரிகள்‌ கட்டாயம்‌ போதிய சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும்‌.

அதேபோல, மார்க்கெட்டிற்கு வரும்‌ வாடிக்கையாளர்கள்‌ அனைவரும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிவதை உறுதி செய்ய வேண்டும்‌. வியாபாரிகள்‌ கிருமிநாசினி கொண்டு கைகளை நன்றாக சுத்தம்‌ செய்து கொள்ள வேண்டும்‌. கடை உரிமையாளர்கள்‌ மற்றும்‌ வியாபாரிகள்‌ தங்களது கடைக்கு வரும்‌ பொதுமக்களை போதிய சமூக இடைவெளியினை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும்‌.

மேலும்‌, மாநகராட்சியால்‌ வழங்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றாமல்‌ செயல்படும்‌ கடை உரிமையாளர்கள்‌ மற்றும்‌ வியாபாரிகள்‌ மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில்‌, மார்க்கெட்‌ கடை உரிமையாளர்கள்‌, நிர்வாகிகள்‌ மற்றும்‌ அதிகாரிகள்‌ கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க