• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது

June 4, 2020 தண்டோரா குழு

கோவையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கோவை போத்தனூர் கணேசபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கொரானா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவை போத்தனூர் வந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி மாணவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வம்(32) என்பவர் தனது நண்பர்களான ராஜா மற்றும் சூரிய ராஜ் ஆகியோர் உதவியுடன் மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது, தெரியவந்தது.

இதனையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர், ஆட்டோ ஓட்டுனர் செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் ராஜா சூரியராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேற்கொண்டு இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க