புதுச்சேரி நெல்லிதோப்பு சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை தருவேன் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நவம்பர் 19ம் தேதி புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கு தேர்தல் நடக்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. இதனையடுத்து இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று தனது பிரசாரத்தை துவக்கினார்.
பிரசாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
புதுச்சேரி மக்கள் நான் தற்போது மேற்கொண்டு வரும் ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் . நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெற்று, 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை தருவேன்.
பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் முகுல்ராய், குலாம்நபி ஆசாத் ஆகியோர் புதுச்சேரி வர உள்ளனர்.திமுக பொருளாளர் மு க ஸ்டாலினும் எனக்காக பிரசாரம் செய்ய புதுச்சேரி வர உள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவு செய்யப்படும் என கூறினார்.
ஜெர்மனியில் சத்குருவிற்கு வழங்கப்பட்ட “ப்ளூ டங்” விருது
இந்திய போட்டித் துறை ஆணையம் (CCI), ஆசியான் பேயிண்ட் கம்பெனிக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவு
கர்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய் பாதிப்புகளை தவிர்க்க சிறுவயதில் ஹெச்.பி.வி.தடுப்பூசி செலுத்திகொள்வது அவசியம் – பொதுமக்களுக்கு டாக்டர்கள் அறிவுரை
இந்தியாவில் முதன்முறையாக தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டி கோவையில் துவங்கியது
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது
‘புதிய வேளாண் காடுகள் விதிகள்’ – நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு