• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 11 பேர் உயிரிழப்பு

June 3, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 1,286 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று புதிதாக 1,286 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 1,244. பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 42 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுள்ளது. இது அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,012 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 11 பேர் பலியானதைத்தொடர்ந்து மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரேநாளில் 610 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 14,316 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 11,345 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து 4 ஆம் நாளாக கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க